Wednesday 31 July 2013

திறன் மிகு நுண்ணுயிரி (effective micro organisms)

வீட்டு கழிவுகளை மக்க வைக்கும் தொழில் நுட்பம் 

 திறன் மிகு நுண்ணுயிரி (effective micro organisms)  
    தயாரிக்கும் முறை 

தேவையான பொருள்

மஞ்சள் பூசணி  5 k  .g
பப்பாளி பழம்  5 k .g
வாழை பழம் 25
முட்டை 2
வெல்ல்ம் 500grm
மோர்  2lr
இளநீர் 1
அரிசி கழுவிய நீர் இப் பழங்கள் முழ்கும் வரை

தயாரிக்கும் முறை

பழங்கள்  அனைத்தையும் பெரிய துண்டுகளாக வெட்டி ஒரு பிளாஸ்டிக் டப்பில் போட்டு அதன் மேல் மோர் இளநீர் முட்டை வெல்ல்ம் ஆகியவற்றை போட்டு இக் கலவை முழ்கும் வரை அரிசி கழுவிய நீர் விட்டு மூடி  வைக்க வேண்டும் 15நாள்  கழித்து  பார்த்தால் மேல் பகுதி நீரில் வெண்மை நேரத்தில் ஆடை போல் தெரியும் அவ்வாறு இருந்தால் திறன் மிகு நுண்ணுயிரி (effective micro organisms)   தயார் என்று அர்த்தம் .

பயன் படுத்தும் முறை 

இக் கரைசலை நன்கு கலக்கி பின் அதில் உள்ள நீரை 1:10 விகிதத்தில் தண்ணீர் சேர்த்து கழிவுகள் மீது  தெளிக்க வேண்டும் இவ்வாறு 15 நாளுக்கு 1 முறை தெளித்து வர கழிவுகள் 60 நாளில் மக்கி விடும் . கழிவுகள் காயாத வாறு தினமும் நீர் தெளிப்பது அவசியம் ஆகும் .

Friday 1 March 2013

ஜீவாமிர்தம்

                                                                  ஜீவாமிர்தம்
 வணக்கம் .
பல் வகை பயிர் தொழில் நுட்பத்திற்கு பின் நாம் செய்ய வேண்டியது ஜீவமிர்த்த கரைசல் இடுவது அவசியம் ஆகும் . இதனால் செலவும் குறைவு மண்ணும் வளமாகும் .
ஜீவாமிர்தம் என்றால் என்ன ?
மண்ணில் உயிர் சத்தை அதிகரிக்கும் கரைசல் ஜீவாமிர்தம் ஆகும் இதை இடுவதால் 15 அடி ஆழத்தில் உள்ள மண்புழுவும் எழுந்து வரும் என்பது உறுதி 
ஜீவாமிதம் தயாரிக்கும் முறை :-
சாணி 10 கிலோ 
கோமியம் 10லிட்டர் 
வெல்லம் 2 கிலோ 
கொள்ளு 1 கிலோ 
பாசிபயறு 1 கிலோ 
(தானியத்தை பவுடராக அல்லது முளை கட்டி அரைக்க  வேண்டியது முக்கியம் )
இவற்றுடன் 1கிலோ நல்ல ஜீவன் உள்ள மண் (கரம்பை )
இவை அனைத்தையும் 200லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரலில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு கிண்டி விடவேண்டும் ஒரு நாளைக்கு 3 முறை என்ற அளவில் இரண்டு நாள்கள் கழித்து பயன் படுத்த வேண்டும் இதுவே ஜீவாமிர்தம் ஆகும் .
பயன் படுத்தும் முறை மற்றும் அளவு :-
1 ஏக்கருக்கு 200லிட்டர் கரைசல் இதை பாசன நீருடன் கலந்து விட வேண்டும் .இதை குறுகிய கால பயிர்ருக்கு 20 நாளுக்கு 1 முறையும் நீண்ட கால பயிருக்கு மாதம் 1முறை என்ற அளவில் பயன் படுத்த வேண்டும்  

Monday 11 February 2013

பல்வகை பயிர் தொழில் நுட்பம்

வணக்கம் அன்பர்களே ,
உங்களை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது . தற் சமயம் நெல் அறுவடை நடந்து கொண்டு உள்ளது . நாங்கள் செய்த பயிர்  தொழில் நுட்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் . இது வரை ரசாயனம் பயன்படுத்தி வந்த வயல் என்பதால் மிகவும் உயிர் சத்து இல்லாமல் இருந்தது அதை இயற்கை விவசாயம் மாற்றி தந்து விட்டது அந்த தொழில் நுட்பம் என்ன வென்றால் நம் முன்னோர்கள் சொல்லித் தந்த பல்வகை பயிர் தொழில் நுட்பம்   ஆகும் .

பல்வகை பயிர் தொழில் நுட்பம்  என்றால் என்ன ?

பல்வகை பயிர் தொழில் நுட்பம்  என்பது 16 வகை தானியங்களை வயலில் விதைத்து அதை 45 நாட்களில் (பூக்கும்  பருவத்தில் ) மடக்கி உள  வேண்டும் அவ்வாறு செய்யும் போது தளை சத்து மண்ணில் அதி கறிக்கும் மேலும் பயறு வகை பயிர் களின் வேர் முடிச்சு களில் உள்ள ரைசோபியம் மண்ணில் உள்ள பாஸ்பரசை பயிர் களுக்கு எடுத்து கொடுக்கும் .எனவே பயிர் சிறப்பாக வளர்கிறது .

பல்வகை பயிர் தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தும் தானிய வகைகள் :-

தானியப் பயிர் 4

சோளம் 1 கிலோ
கம்பு 1/2 கிலோ
தினை 1/4 கிலோ
சாமை 1/4 கிலோ

பயறு வகை பயிர் 4

உளுந்து 1 கிலோ
பாசிபயறு 1 கிலோ
தட்டைபயறு 1 கிலோ
கொண்டைக்கடலை 1 கிலோ

எண்ணை வித்துக்கள் 4

எள் 1/2 கிலோ
கடலை 2 கிலோ
சூரிய காந்தி 2 கிலோ
ஆமணக்கு 2 கிலோ

பசுந்தாள் பயிர் கள்  4

தக்கை பூண்டு 2 கிலோ
சணப்பு 2 கிலோ
நரிபயறு 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ

மணப் பயிர்கள் 4

கடுகு 1/2 கிலோ
வெந்தயம் 1/4 கிலோ
சீரகம் 1/4 கிலோ
கொத்தமல்லி 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 45 முதல் 50 நாட்களில்  மடக்கி உள வேண்டும்
மேலும் கடைசி உளவின் போது 200 கிலோ வேப்பன் கொட்டையை இடித்து வயலில் துவ வேண்டும்
இவ்வாறு செய்யும் போது வேர்புழு தாக்கம் குறையும் .





.


Tuesday 2 October 2012

தொல்லுயிர்கரைசல்

                                                   தொல்லுயிர்கரைசல் 

தொல்லுயிர் கரைசல் என்பது புதிய  சாணம் 10 கிலோ  ,கடுக்காய் தூள் 50 கிராம்  ,அதிமதுர தூள்5 கிராம் , வெல்லம் 1.5 கிலோ தண்ணீர் 1 லிட்டர்  இதில் முதலில் தண்ணீரை லேசாக சுடவைத்து அதில் அதிமதுர பொடியை கலக்கி வைத்துகொள்ளவும் பின் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேனில் அனைத்து பொருள்களையும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி விடவேண்டும். இரண்டு நாள் கழித்து கேனில் உள்ள மீத்தேன்  வாய்வை வெளியேற்றி பின் 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து வைக்க வேண்டும் .10 நாட்களில்   தொல்லுயிர்கரைசல் தயார் .

  தொல்லுயிர்கரைசல் பயன் படுத்தும் முறை மற்றும் அளவு :-

400 லிட்டர் தண்ணீரில் 1 கேன்  தொல்லுயிர்கரைசல் கலந்து 2 ஏக்கர்  நிலத்திற்கு பாய்ச்ச  வேண்டும்.

10 லிட்டர் தண்ணீருடன் 1 லிட்டர்  தொல்லுயிர்கரைசல் சேர்த்து இலைகளில் தெளிக்கவும் செய்யலாம்.

இது இலை  தழை களை விரைவில் மக்க வைக்கும் தன்மை கொண்டது .

  தொல்லுயிர்கரைசல் என்றால் என்ன 

 தொல்லுயிர் கரைசலில் இருக்கும் பாக்டீரியா archae bacteria ஆகும் . இது உலகின் முதல் பாக்டீரியா ஆகும் .நம் வயல்களில் தற்போது பாக்டீரியா குறைந்த அளவே உள்ளது எனவே நாம் பல்வகை பயிர் தொழில் நுட்பம் பயன் படுத்தி செடிகளை விரைவில் மக்க வைக்க இக்கரைசல் நன்கு உதவும் . 

Sunday 30 September 2012

                            வாழை சாகுபடி தொழில் நுட்பம்
ராகம்:-
பூவன் , நேந்திரன் , ரஸ்தாளி , ரோபஸ்டா ,மோரிஸ்   , செவ்வாழை ,  திசு வாழை .
பட்டம் :-
கார்த்திகை, மார்கழி
பயிர் இடைவெளி :-
ரோபஸ்டா:-
6 க்கு 6 அடி ஒரு ஏக்கருக்கு 1210 கட்டைகள்
மோரிஸ் :-
5.5 க்கு 5.5 அடி ஒரு ஏக்கருக்கு 1440 கட்டைகள்
செவ்வாழை :-
8 க்கு 8அடி ஒரு ஏக்கருக்கு 700 கட்டைகள் .
பூவன் :-
7 க்கு 7 அடி ஒரு ஏக்கருக்கு 900 கட்டைகள் .
கட்டைத்  தேர்வு :-
ஈட்டி இலை , நோய் தக்கதது 9 முதல் 12 பட்டையுடைய கன்று இருக்க வேண்டும் .
கட்டையின்  அளவு :-
1.5 முதல் 2.5 கிலோ
கட்டை நேர்த்தி :-
ஒரு கட்டைக்கு 10 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் 200 லிட்டர் பேரலில் நீர் சேர்த்து கலந்து கட்டையை நனைத்து அரை மணி நேரம் வைத்திருந்து நடவு செய்யலாம் .
நிலம் தயாரித்தல் :-
3 முதல் 5 உழவுகள் போடவேண்டும் .
தொழு உரம் :-
10 டன் அல்லது 1 டன் மண்புழு உரம்
நடவு முறை :-
ஒரு அடி குழி எடுத்து அதில் 100 கிராம் மண்புழு உரம் வேப்பம் கொட்டை கரைசல் 100 மில்லி என்ற அளவில் குழியில் இட்டு அதில் கட்டையின்  கிழங்கு பகுதியில் இருந்து மேலாக 20 செ .மீ  உயரத்தில் வெட்டிய கட்டையை  குழியில் வைத்து மண்ணைப் போட்டு  நன்றாக மிதித்து விடவேண்டும் .
ஊடுபயிர் :-
ஊடு பயிராக பயறு வகை பயிர்கள் கொத்த மல்லி விதைத்து குறைந்த காலத்தில் (40 நாள் ) அதிக லாபம் பெறலாம் . மண்ணில் தழைச் சத்தை அதிகப் படுத்த பசுந்தாள் விதைகளான சணப்பு , நெட்டி போன்றவைகளை விதைத்து 30 நல கழித்து களை கொத்தி கொண்டு கொத்துவதல் மண்ணின் வளம் கூடும் . களையையும் கட்டுபடுத்தலாம் . மேலும் வாழைக்கு தேவையான தழைச் சத்தும் கிடைக்கும் .
களை நிர்வாகம் :-
நடவு செய்த 30 ஆம் நாள்முதல் களையும் தொடர்ந்து 40 நாட்களுக்கு ஒரு முறை களை  வெட்ட வேண்டும் .
உயிர் உரம் :-
நடவு செய்த 30 ஆம் நாள் 1வாழை கட்டைக்கு 100 கிராம் மண்புழு உரம் என்ற அளவில் போட வேண்டும். அத்துடன் பழக்காடி கரைசல் 100 மில்லி ஊற்றவும் .
உர நிர்வாகம் :-
30 ஆம் நாள் மரம் ஒன்றிக்கு 30 மில்லி பஞ்ச கவ்யாவை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து  கன்று மேல் ஊற்றவும் .
60 ஆம் நாள் மரம் ஒன்றுக்கு 10 மில்லி முட்டை கரைசலை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும் .
90 ஆம் நாள் மரம் ஒன்றுக்கு 10 மில்லி மீன் அமினோ அமிலத்தை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும்.
15 நாளுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்த்த கரைசலை 1 ஏக்கருக்கு தண்ணீருடன் சேர்த்து பாய்ச்ச   வேண்டும் .
5 ஆம் மாதம் மரம் ஒன்றுக்கு 50 மில்லி பஞ்சகவ்யாவை  1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும் .
6 ஆம் மாதம் மரம் ஒன்றுக்கு 50 பழக்காடி கரைசலை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றவும் .
நீர் நிர்வாகம் :-
தண்ணீர் தேங்கக் கூடாது தண்ணீர் நின்றால் பூஞ்சான  நோய் தாக்க வாய்ப்பு உள்ளது . ஆனால் வயலில் ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் .
பின் செய் நேர்த்தி :-
மாதம் ஒரு முறை மண் அனைத்தால் நல்லது இலைப்  புள்ளி நோய் பரவுவதைத் தடுக்க காய்ந்த மற்றும் நோயுற்ற இலைகளை அவ்வப்போது நீக்க வேண்டும் .
கிழங்கு கூன்வண்டு தாக்குதல் :-
அறிகுறி :-
மரத்தில் கருப்பு அல்லது செம்பழுப்பு துளைகள் காணப்படும் . இத் துளைகளில் சருவடிந்து நாளடைவில் மரம் காய்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை:-
1 லிட்டர்   தண்ணிரில் 100 மில்லி அக்னி  அஸ்திரத்தை கலந்து வேர் பாகம் நனையும் படி ஊற்ற  வேண்டும் .
கண்ணாடி இறக்கை பூச்சி  தாக்குதல் :-
அறிகுறி :-
இப் பூச்சி  இலையின் அடியில் இருந்து சாறினை உறிஞ்சுவதால் இலையின் மேல்புறம் வேன்மையன் புள்ளிகள் காணப்படும் .
கட்டுபடுத்தும் முறை :-
பொன்னிம்  கரைசல் 20 மில்லி 1 லிட்டர் தண்ணீருடன்  கலந்து தெளித்து கட்டுபடுத்தலாம் .
வாடல் நோய் தாக்குதல் :-
5,6 மாத வாழை மரங்களில் இந்நோய் தாக்கும் தாக்கப்பட்ட வாழை இன் இலை விளிம்புகள் மஞ்சள் நிறம் மடையும் 8 அல்லது 9 மாதங்களில் இந்நோய்  தாக்க
கூடிய மரங்களின் இலை ஒடிந்து தொங்கி விடும். மரத்தின் அடியில் ஒரு வித துர் நாற்றம் வீசும் மண்ணை தோண்டிப் பார்த்தால் கிழங்கு அழுகி இருக்கும்.
கட்டுபடுத்தும் முறை :-
2 வது 4 வது 6 வது மாதத்தில்  வாழை மரத்தின் கிழங்கு பகுதி நனையுமாறு 100 மில்லி தசகவ்யாவை 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து வயல் ஈரம் இருக்கும் பொழுது ஊற்ற வேண்டும் .
முடி கொத்து  நோய் :-
அறிகுறி :-
இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் சிறுத்து காணப்படும் மரத்தின் வளர்ச்சி குன்றி இருக்கும் இலையின் ஓரங்களை மடக்கினால் படபட வென ஒடியும் இந்நோய்  தாக்கப் பட்ட மரங்களில் குலை தள்ளாது . இவை அசுவினி மூலம் பரவுகிறது .
கட்டுபடுத்தும் முறை:-
நோய் தாக்கிய வாழையை கிழங்குடன் அகற்றி விட வேண்டும். குழி யில்  1 கிலோ சுண்ணாம்பு இட்டு மூட வேண்டும். அக்னி அஸ்திரம் 50 மில்லி
1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து நடவு செய்த 3 வது மதம் முதல் குலை தள்ளும் வரை 45 நாள் இடைவெளியில் அடி மரத்தில் ஊற்ற வேண்டும் .
இலைக் கருகல் நோய் :-
அறிகுறி :-
வாழையில் சிறிய இளம் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி பின் பழுப்பு நிறமடையும்.
கட்டுப் படுத்தும் முறை :-
1 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி  பொன்னிம் கரைசல் சேர்த்து இலையில் தெளிக்க வேண்டும் .
காஞ்சார நோய் தாக்குதல் :-
அறிகுறி :-
இலைகள் பழுத்து புள்ளிகள் விழுந்து காய்ந்து வலுவிழந்து காணப்படும் .
கட்டுபடுத்தும் முறை :-
60 முதல் 70 சதம் காய்ந்த இலைகளை அறுத்து எடுத்து விட வேண்டும். 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா கலந்து தெளிக்க வேண்டும் .
அறுவடைத் தொழில் நுட்பம் :-
முற்றிய காய்கள் இளம் மஞ்சள் நிறமாக தெரியும் போது அறுவடை செய்யலாம் .
முக்கியக் குறிப்பு :-
வாழை இலையின் கடைசி சீப்பு வந்த உடன் அதன் நுனியில் பூவை ஒடித்து விட வேண்டும். அதனால் காய் விரைவில் முதிர்ச்சி அடையும் .
15 நாளுக்கு 1 முறை ஜீவமிர்தம் பழக்காடி கரைசல் மாற்றி மாற்றி குலை வரும் வரை நீர் பாசனத் துடன் கலந்து  விட்டால் நிலம் செழிப் படையும் .
சித்த கத்தி மரத்தை வாழை தோட்டத்தை சுற்றி நட்டால் அது காற்று தடுப் பானாக செயல்பட்டு காற்றினால் ஏற்படும் சேதாரத்தை தடுக்கும் .
25 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்த கலவையை ஒவ்வொரு மரத்தை நட்ட 6 ஆம் நாளில் சுற்றிலும் இட்டால் பூச்சி  தாக்கம் கட்டுப்படும் .
வாழை பூ ஒடித்த உடன் சிறு பிளாஸ்டிக் பையில் 5 மில்லி பஞ்சகவ்யா வில் 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்டினால் காயின் பருமன் கூடும் .
அல்லது குலை மேல் பஞ்ச கவ்யா கரைசல் தெளிக்க வேண்டும்.

Thursday 5 July 2012

விளம்பரம்

பஞ்சகவ்யா என்றால் என்ன ?

பஞ்சகவ்யா என்பது பசு மாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து  வகைப் பொருள்களைக் கொண்டு தயார் செய்வது ஆகும் .

பயன்கள் :-

இது ஒரு நல்ல பயிர்  வளர்ச்சி ஊக்கியாக  செயல் படுகின்றது .

உபயோகிக்கும் அளவு  மற்றும் முறை :-

தொட்டி செடி என்றால் பத்து தொட்டிக்கு 10ml பஞ்சகவ்யா உடன் 300ml தண்ணீர் சேர்த்து அதனுடன் 5ml பேபி சாம்பு or குளியல் சோப்பு கரைசல் சேர்த்து இலை களில் தெளிக்க வேண்டும் .

தசகவ்யா என்றால் என்ன ?

9 வகையான தாவிர இலைகளை பசுவின் கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி எடுக்கும் திரவம் ஆகும் .

பயன்கள் :-

இது ஒரு சிறந்த பூச்சி விரட்டியாகும். செம்பருத்தி செடியில் உள்ள மாவுப் பூச்சி, ரோஸ் செடியில் உள்ள பச்சை புழு மற்றும் இலை சுருட்டு புளுகளையும் கட்டுப்படுத்தும் .

உபயோகிக்கும் அளவு  மற்றும் முறை :-


ஒரு செடிக்கு 10ml தசகவ்யாவை 200ml தண்ணீர் சேர்த்து  அதனுடன் 1ml  பேபி சாம்பு or குளியல் சோப்பு கரைசல் சிறிது  சேர்த்து இலை களில் தெளிக்க வேண்டும் . (சாம்பு ஒரு ஓட்டும் திரவமாக செயல் படும் ) தேவைக்கு தக்க பூச்சி மருந்தின் அளவை அதிகரிக்கலாம் .

விளம்பரம்

மண்புழு உரம் என்றால் என்ன ?

பசும் சாணம் மற்றும் இலை தழை கழிவுகளை மக்க வைத்து மண்புழுவிற்கு உணவாக கொடுக்க வேண்டும் . அதை உண்டு மண்புழு வெளியேற்றும் கழிவே மண்புழு உரமாகும் .

பயன்கள் :-

 பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.


உபயோகிக்கும் அளவு :-

சிறிய தொட்டிக்கு 200 கிராம் அளவும் பிரியா தொட்டிக்கு 300 கிராம் அளவும் 2 மாதத்திற்கு ஒரு முறை இடவேண்டும்.
தென்னை, மா  முதலிய மரத்திக்கு 5 கிலோ அளவில் வருடத்திற்கு நான்கு  முறை பயன்படுத்த வேண்டும் .

உபயோகிக்கும் முறை :-

செடி அல்லது மரத்தின் வேர் பகுதியில் உள்ள மண்ணை சிறிது அகற்றிவிட்டு உரத்தினை போட்டு பின் மண்ணை மூடிவிடவேண்டும் . ராசி மண்புழு உரத்தில் நுண்ணுயிரிகள் அதிக அளவில் இருப்பதால் சூரிய ஒளி  பட்டு அவை பாதிப்பு அடையாத வரு வேர்கள் மண்புழு உரத்தின் அணைத்து சத்துக்களையும் கிரைகித்து  கொள்ள இந்த மண் மூடாக்கு அவசியம் .